பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரியை மூடக்கோரி, கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்திற்கு அருகில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கல் குவாரிக்கு கடந்த அதிமுக ஆட்சியின்போது, தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாய நிலங்கள், வீடுகள் நிறைந்த பகுதி அருகில் உள்ள மலையில் தினந்தோறும் அரசு விதிகளை மீறி அதிக சத்தத்துடன் கூடிய வெடி மருந்து பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் கிராமத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் அச்சமடைகின்றனர்.