பேனர் கலாச்சாரத்தை கைவிட வேண்டும்: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அறிக்கை

சென்னை:திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில், “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன்முதலில் உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர்தான், சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதை திமுகவினர் அனைவரும் அறிவீர்கள். அதன்பிறகு, திமுகவினர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒருசிலர் இன்னும் பேனர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை, திமுக ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே, அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவரின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும், திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: