சென்னை கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 100வது பிறந்தநாள்: கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து Jul 16, 2021 கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கராய சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா நேற்று தனது 100வது பிறந்த நாளை குரோம்பேட்டை, நியூ காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார். இதனையொட்டி, பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சுதந்திரபோராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரை ெதாடர்ந்து, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, டி.ராஜா எம்.பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட ஏராளமானோர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து விற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்