திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய்கள் கடித்து மான் பலியானது.திருவண்ணாமலை தீப மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. மலையில் இருந்து மான்கள் கூட்டம், கூட்டமாக மலையடிவார பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கிரிவலப் பாதையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடையானது. எனவே, அமைதி சூழ்ந்த கிரிவலப் பாதையில் அடிக்கடி மான்கள் நடமாடுவது அதிகரித்துள்ளது.