காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி பரிந்துரையின்பேரில், பிரதிநிதிகள் சபை எனப்படும் நாடாளுமன்ற கீழவையை கலைத்து கடந்த மே 22ம் தேதி அதிபா் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டாா். நாடாளுமன்றத்துக்கு நவம்பா் மாதம் தோ்தல் நடத்தவும் அவா் உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற கலைப்பை ரத்து செய்ய வேண்டும்; நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கோரி எதிா்க்கட்சிகள் சாா்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.