மதுரை: மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலக வளாகத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:அதிமுக ஆட்சிக்காலத்தில், பத்திர பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட மதிப்பு குறைத்து, பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, தேனி மாவட்டத்தில் முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார், அரசுக்கு செலுத்த வேண்டிய ₹20 லட்சத்து 23 ஆயிரத்து 680 பணத்தை தன்னுடைய வங்கிக்கணக்கில் செலுத்தியதற்காக இரவோடு, இரவாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.