நாகர்கோவில்: தமிழகத்தில் அறநிலையத்துறையில் இந்துக்களுக்கே பணி வழங்க வேண்டும். அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை முழுமையாக மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மகா சபா சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தினமும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகிறது.