இந்தியா பட்டியலினத்தை சேர்ந்த 11,900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி!: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு..!! Jun 28, 2021 தெலுங்கானா முதல் அமைச்சர் தெலுங்கானா: பட்டியலினத்தை சேர்ந்த 11 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியல் வகுப்பினருக்கு நிதி திட்டத்தை அறிவித்தார். அதில், சுமார் 11 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பட்டியலினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்க ரூ. 10 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலா 100 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டில் பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டுக்கு தெலுங்கானா அரசு ரூ.40 ஆயிரம் கோடி செலவிடும் என தகவல் தெரியவந்திருக்கிறது.
பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!!
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது..!!
வன்முறையால் வாக்குப்பதிவு நிறுத்தம்: கூடுதல் பாதுகாப்புடன் மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!!
கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள்: தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு: காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்