இந்தியா கொரோனாவை ஒழிக்க குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்!: செப்டம்பரில் அனுமதி கிடைக்க வாய்ப்பு..எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..!! Jun 24, 2021 எய்ம்ஸ் டெல்லி: கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, செப்டம்பரில் அதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா 3ம் அலை உண்டானால் அது குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி மற்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் தடுப்பூசியை இந்தியா கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், பள்ளிகளை திறப்பதில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உள்ள நிலையில், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது எனவும் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். அரசும், பொதுமக்களும் நினைத்தால் 3வது அலையை தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்
பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!