குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மம்தா ஆலோசகருக்கு 30 நாள் கெடு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில், யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அவரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை தனது ஆலோசகராக நியமித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்ததற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக அவர் பெறவேண்டி ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைக்க அலபன் பந்தோபாத்யாய்க்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. அதன்படி, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories: