கொல்கத்தா: மேற்குவங்கத்தில், யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அவரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை தனது ஆலோசகராக நியமித்தார்.