இந்தியா மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழப்பு; மாநில சுகாதாரத் துறை தகவல் Jun 21, 2021 மகாராஷ்டிரா மாநில சுகாதார துறை மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை கரும்பூஞ்சை பாதித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும், ஒவுரங்காபாத்தில் 75 பேரும் கரும்பூஞ்சைக்கு உயிரிழந்து உள்ளனர். மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கொரோனா நோய் பரவி வருகிறது. தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு பக்கம் இருக்க பச்சை பூச்சை நோய் பரவி வருகிறது,
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்