திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் வந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரனின் 2 பாதுகாப்பு வாகனங்களை கேரள அரசு வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ.வை சேர்ந்த முரளீதரன், வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கிறார். நேற்று இவர் திருவனந்தபுரம் வந்தார். இவருக்கு வழக்கமாக பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்கள் முன்னும், பின்னுமாக பாதுகாப்புக்கு செல்லும். நேற்று முரளீதரன் திருவனந்தபுரம் வந்தபோது, அவருக்கு இந்த 2 பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவில்லை. வழக்கமாக அவருடன் செல்லும் பாதுகாவலரான பிஜு என்பவர் மட்டுமே இருந்துள்ளார்.