அகமதாபாத்: குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 146 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஜிடியு) சார்பில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின. குறிப்பாக, இளங்கலை, டிப்ளமோ, இன்ஜினியரிங், பார்மசி, எம்பிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு நடைபெற்றது. அதில், தேர்வு எழுதும்போது பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கிய 160 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டதில், 146 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது.