புதுடெல்லி: குஜராத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரம சாலையில் மாநில ஆம்ஆத்மி கட்சியின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘ஒரு காலத்தில் தலைநகர் டெல்லியை ஆக்கிரமித்து இருந்தது போன்று தற்போது குஜராத் மாநிலத்தையும் இரண்டு கட்சிகள் தங்கள் வசமாக வைத்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 27 ஆண்டாக இங்கு பாஜ ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசோ பாஜவின் சட்டைப் பையில் உள்ளது. எனவே, இங்கு பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும்.