புதுடெல்லி: தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறும்படி பாஜ.வில் இருந்து திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்திருக்கும் முகுல் ராய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், கடந்த 2017ம் ஆண்டு பாஜ.வில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவியை பாஜ வழங்கியது. மேலும், மேற்கு வங்கத்தில் அவர் தாக்கப்படும் அபாயம் இருந்ததால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பையும் அளித்தது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணா நகர் அட்டர் தொகுதியில் போட்டியிட்டு திரிணாமுல் வேட்பாளரையும் முகுல் ராய் வெற்றி கொண்டார். முன்னதாக, பாஜ.வுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையிலான மோதல், தேர்தலுக்கு முன்பாக உச்சக்கட்டத்தில் இருந்தது.