பொருளாதார வலுவடைய மேக் இன் இந்தியா வழிவகுத்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா’ திட்டத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: ‘‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அயராது உழைத்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். ‘‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது, திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொருளாதாரம் வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து வழிகளிலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சீர்திருத்தங்களில் இந்தியாவின் முன்னேற்றம் தொடரும். ஒன்றிணைந்து, நாம் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post பொருளாதார வலுவடைய மேக் இன் இந்தியா வழிவகுத்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: