சென்னை: ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லைமுபாரக் சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை, குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், பாரபட்சம் பாராமல் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.