முக்கிய செய்தி இந்தியா ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா 2ம் அலையில் சிக்கி நாடு முழுவதும் 594 டாக்டர்கள் உயிரிழப்பு!: இந்திய மருத்துவ சங்கம் தகவல்..!! Jun 02, 2021 ருத்ரதான்தவம் இந்திய மருத்துவ சங்கம் டெல்லி: கொரோனா வைரஸின் 2ம் அலையில் சிக்கி நாடு முழுவதும் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 26 மாநிலங்களில் இதுவரை 594 மருத்துவர்கள் கொரோனா 2ம் அலைக்கு பலியாகி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 107 டாக்டர்கள் கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 96 மருத்துவர்கள் மக்கள் சேவையில் உயிர் நீத்திருக்கின்றனர். உத்திரபிரதேசத்தில் 67 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும் கொரோனா 2வது அலைக்கு பலியாகியிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. இதேபோல் ஜார்கண்ட், காஷ்மீரில் 39 பேர், ஆந்திரா 32, குஜராத் 31 பேரும் கொரோனா கொல்லுயிரிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர்கள் 21 பேர் கொரோனா 2ம் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் டாக்டர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் பலருக்கும் நோய்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பது வருத்தமளிக்கிறது.
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?: உச்சநீதிமன்றம் காட்டம்!!
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை
கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை!!
பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்!