கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பா? எடியூரப்பா தகவல்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 17 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ``பிரதமர் நரேந்திர மோடி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி மைசூரு, கோலார் உள்ளிட்ட 17 மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினேன். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் லாக் டவுன் நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி உடன் ஆலோசனைக்கு பிறகு லாக்வுடன், தொகுப்பு நிவாரணம் குறித்து பரிசீலனை நடத்துவோம்’’ என்றார்.

Related Stories: