மருத்துவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில முதல்வர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக, நேற்று மருத்துவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர். காணொலி வழியே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவர்கள் தங்களது அனுபவங்களயும், ஆலோசனைகளையும் கொரோனா மேலாண்மை குறித்து பிரதமரிடம் பகிர்ந்துகொண்டனர். அப்போது பிரதமர் மோடி, அசாதாரண சூழலில் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறினார். மியூகோர்மைகோசிஸ் எனும் கறுப்பு பூஞ்சை நோய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதில் மருத்துவர்கள் இன்னும் அதிக உழைப்பை காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: