இந்தியா கொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்!: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..!! May 17, 2021 புதுச்சேரி: புதுவை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருந்தாலும் கொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் படுக்கை பற்றாக்குறை, இறந்தவர்களை கையாள்வதில் அலட்சியம் உள்ளிட்ட குற்றசாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்தில் கூடுதலாக 300 படுக்கைகள் உருவாக்கப்படும் என்றார். புதுவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்