முக்கிய செய்தி இந்தியா கொரோனா 2ம் அலையை கையாண்டதில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு!: வைரஸ் ஆராய்ச்சி வல்லுநர் ஷாஹித் ஜமீல் திடீர் பதவி விலகல்..!! May 17, 2021 அரசு கொரோனா ஷாஹித் ஜமீன் டெல்லி: இந்திய சார்ஸ் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி கூட்டமைப்பை சேர்ந்த வல்லுநர் ஷாஹித் ஜமீல் பதவி விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்த ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக பதவி வகித்து வந்த ஷாஹித் ஜமீல் அனுப்பியுள்ள தமது பதவி விலகல் கடிதத்தில் காரணம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் கொரோனா 2ம் அலையை மத்திய அரசு கையாண்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரது பதவி விலகளுக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஷாஹித், எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆய்வாளர்கள் இருப்பதாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே திட்டங்கள் உருவாக்கப்படுவது குறித்து அவர் தெரிவித்திருந்தார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டில் கொரோனா 2ம் அலையின் தாக்குதல் பற்றியும், உருமாறிய வைரஸின் தொற்று வீரியம் குறித்தும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை அலட்சியம் செய்த மத்திய அரசு, கும்பமேளா உள்ளிட்ட மக்கள் பெருமளவு திரளும் விழாக்களுக்கு அனுமதி அளித்தது, தேர்தல் பிரச்சார கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதும் தான் இன்று இந்தியா எதிர்கொண்டுள்ள பெரும் துயரத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே ஷாஹித் ஜமீல் பதவி விலகலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்து சக வல்லுனர்களோ, மத்திய அரசு தரப்பிலோ கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர்.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு