அரசின் கொள்கை 3வது அலையை ஏற்படுத்தும்: ராகுல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “  மத்திய அரசின் பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி கொள்கையானது பேரழிவை தரும் மூன்றாவது அலையை உறுதி செய்யும். இந்தியாவிற்கு முறையாக தடுப்பூசி உத்தி அவசியமாகும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன. பிரதமர் மோடி கங்கை தாயை அழவைக்கிறார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் செய்து தர வேண்டும். தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்”  என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: