கேரளாவில் 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியது. இதையடுத்து கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் வரும் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நோய் பரவல்  குறையாததால் முழு ஊரடங்கை வரும் 23ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: