புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தனிநபர் கொள்கையை வெளியிட்டது. இதன்படி, பயனர்களின் தகவல்கள் வணிக நோக்கத்திற்காக தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிரப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தது. மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படும் என எச்சரித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. புதிய கொள்கை குறித்து பலமுறை விளக்கம் அளித்த வாட்ஸ் அப், பின்னர் மே 15க்குப் பிறகு புதிய கொள்கையை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படாது என அறிவித்தது. ஆனாலும், அவர்களுக்கான சேவை படிப்படியாக குறைக்கப்படும் என கூறியுள்ளது.