இந்தியா கொரோனா பரவல் எதிரொலி: நேபாளத்தில் சர்வதேச விமானங்கள் மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவு May 12, 2021 நேபால் நேபாளம்: நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே இறுதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மே 14-ஆம் தேதி வரை சர்வதேச விமானம் இயங்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை புதிய முன்பதிவுகளைத் தொடங்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ மற்றும் சரக்கு விமானங்கள் இயக்கத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேபாளத்தில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மே கடைசி வரை நீட்டித்து அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்