புதுடெல்லி: டெல்லியின் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் சிங்கு, திக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அந்த பெண் திக்ரி எல்லையில் சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், பின்னர் அவர் கொரோனா தொற்றால் அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.