இந்தியா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி!: கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் சட்டப்பேரவை அலுவலகம்..!! May 10, 2021 கொரோனா புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. புதுச்சேரி மாநில முதலமைச்சராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் உள்ள ரங்கசாமியின் அலுவலகம் மற்றும் செயலாளர் அலுவலகம் இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் இன்று ஒருநாள் மூடப்படுவதாகவும், அலுவலக ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸானது, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வரும் நிலையில் புதுச்சேரி முதலைச்சரையும் அந்த கிருமி விட்டுவைக்கவில்லை என்பது நினைவில் கூறத்தக்கது.
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்