புதுடெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ள சோனியா காந்திகூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ெபரும் பின்னடைவைச் சந்தித்தது. புதுச்சேரியில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் அந்தக்கட்சி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 18 சட்டசபை தொகுதி, ஒரு மக்களவை தொகுதியில் (நாகர்கோவில்) வெற்றி பெற்றது.
தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் காங்கிரசின் செயல்பாடுகள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்து.