பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதி ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் இலவச அரிசி தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி பகுதிகளில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மே மாதத்திற்கான இலவச ரேஷன் அரிசி நேற்று முன்தினம் இப்பகுதி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இந்த அரிசி தரமின்றி வழங்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.