திருவனந்தபுரம்: கேரளாவில் அவசர நேரங்களில் மருந்து வாங்க பொதுமக்கள் போலீசாரை அணுகலாம் என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்ைட விட்டு ெவளியே ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் மருத்துவ வசதியை நாடலாம். இதற்காக கேரள காவல்துறையின் ‘‘புளூ ெமடிசின்’’ என்ற செயலியின் சேவையை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே பொதுமக்கள் இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம்.