திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதை தொடர்ந்து நாளை (8ம் தேதி) முதல் 16ம் தேதி வரை 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் நோய் அதிகரித்து வருவதால் கடந்த 4ம் தேதி முதல் கேரளா முழுவதும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.