இந்தியா அசாமில் ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு May 06, 2021 அசாம் அசாம்: அசாமில் இன்று காலை திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. அசாமின் தேஜ்பூர் நகரமருகே இன்று காலை 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த லேசான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த போதும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த 3-ம் தேதியும் அசாம் மாநிலம் சோனித்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, கடந்த 28-ம் தேதியும் இதே சோனித்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!