இந்தியா கொரோனா விவகாரத்தில் பீகார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுகிறோம்!: பாட்னா உயர்நீதிமன்றம் கண்டனம்..!! May 05, 2021 பீகார் பாட்னா உயர்நீதிமன்றம் பாட்னா: கொரோனா விவகாரத்தில் பீகார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகாரில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னர், அங்கு வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து பீகார் மாநில முதல்வர் நித்தீஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதிகள் சக்ரதாரி, சரண்சிங் மற்றும் மோஹித் குமார் ஷா அடங்கிய அமர்வு, மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நித்தீஷ்குமார் அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் நேரில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் கே.என்.சிங்கிடம், பீகாரில் சுகாதாரத்துறையை ராணுவ கட்டுப்பாட்டில் ஒப்படைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவ்வாறு முடியும் என்றால் அதற்கான உத்தரவை கொடுக்க தயார் என்றும் தெரிவித்தனர். மேலும் கொரோனா கட்டுப்படுத்தும் என நித்தீஷ்குமார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!
யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகள் வீட்டில் இருந்தே எடுத்து கொள்ளலாம்: புது வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே நிர்வாகம்