இந்தியா கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவிக்கரம்!: மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு..!! Apr 30, 2021 இந்தியா கொரோனா போர் டெல்லி: கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவிற்கு 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி உள்ளன. கொரோனா 2ம் அலையால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ம் அலையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கண்டு உலக நாடுகள் தாமாக முன்வந்து உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் தீவிரமடையும் கொரோனாவால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை, ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனாவால் சிக்கி தவித்து வரும் இந்தியாவிற்கு 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டிகளையும், சேமிப்பு கட்டமைப்புகளையும் வழங்கி உள்ளன. இதேபோன்று பல்வேறு நாடுகளும் வெண்டிலேட்டர்கள், மருந்து பொருட்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளன. இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் 550 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ உலக நாடுகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.
மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!