சென்னை: சென்னைக்கு நேற்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு வழிகாட்டு ெநறிமுறைகளின்படி நேற்று முன்தினம் வரை 56,68,479 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைத்திட 1.5 கோடி தடுப்பூசிகள் பெற ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.