பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மொத்தம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் இருக்கும் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 20-ம் தேதி இரண்டாம் நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏற்கெனவே 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.