புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோ-வின் ஆப்பில் வரும் 28ம் தேதி முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி 14ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோரும் மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கோ-வின் இணையத்தில் வருகிற 28ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு ேநற்று அறிவித்தது.