திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவம் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 24, 25ம் தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.