இந்தியா உத்தராகண்டில் கேதர்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவில் நடை திறப்பு!: மலர்கள், வண்ண விளக்குகளால் பிரம்மாண்ட அலங்காரம்..!! May 18, 2021 பத்ரிநாத் கோயில் கேதார்நாத் உத்தரகண்ட் டெஹ்ராடூன் பத்ரிநாத் டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிகாலை 4:15 மணியளவில் பக்திநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்திநாத் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தராகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், வழக்கமான வழிபாடுகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வழிபாடுகளின் போது தனிமனித இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி கோவிலை கடந்த 14ம் தேதியும், கங்கோத்ரி கோவிலை 15ம் தேதியும் குருக்கள் திறந்து வழக்கமான பூஜைகளை செய்தனர். ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. … The post உத்தராகண்டில் கேதர்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவில் நடை திறப்பு!: மலர்கள், வண்ண விளக்குகளால் பிரம்மாண்ட அலங்காரம்..!! appeared first on Dinakaran.
பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
“தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!
மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி சரிவு: தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை