புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சுனில் அரோரா, மத்திய பாஜக அரசால், கோவா மாநில கவர்னராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் அரோரா, கடந்த 1980ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ராஜஸ்தான் கேடரில் பணிபுரிந்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் பதவிக்கு வந்தார். அதற்கு முன்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளராக இருந்தார். தற்போது, கோவா மாநிலத்தின் ஆளுநர் பதவி காலியாக இருப்பதால், இவர் அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.