17ல் இடைத்தேர்தல் ஒடிசா காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பிலிபி சட்டப்பேரவை தொகுதியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் மங்கராஜ் (53) கொரோனாவால் பலியாகி உள்ளார். கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக், காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்றுடன் பிரசாரம் முடியும் நிலையில், வேட்பாளர் மறைவால் தேர்தல் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: