வாலிபர் வெட்டி கொலை

தாம்பரம்: கூடுவாஞ்சேரி - பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று காலை தண்டவாளத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வாலிபர் சடலம் கிடந்தது. தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சுமார் 36 வயது வாலிபா், உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சடலமாக இருந்தது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கூடுவாஞ்சேரி அருகே நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி (36) என்பதும், நேற்று காலை வேலைக்கு சென்ற நாராயணமூர்த்தி, பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது உடல் வெட்டு காயங்களுடன் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்ததும் தெரிந்தது. அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா அல்லது தொழில் போட்டியா, கள்ளக்காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: