நெரிசலை குறைக்க நவீன மேம்பாலம்: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 182வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் கடற்கரை, சீ வார்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர்கள் மத்தியில் அசன் மவுலானா பேசுகையில், ‘தொகுதி மக்களை சந்திக்கையில் வெள்ள பாதிப்பு, பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். நான் வெற்றி பெற்றதும் அடையாறு மல்லிப்பூ நகர் தடுப்பு சுவர், பட்டா பிரச்னைக்கு தீர்வு காண்பேன். வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் குடியிருப்புக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த நடடிக்கை எடுப்பேன். ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்படும்.

வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வேளச்சேரி - விஜயநகர் மேம்பாலத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் நவீன மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார். திமுக பகுதி செயலாளர் துரை கபிலன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, மதிமுக மாவட்ட செயலாளர் கழக குமார், 182வது வார்டு பொறுப்பாளர் பி.விக்னேஷ், வட்ட செயலாளர் கணேஷ்குமார், திமுக நிர்வாகிகள் நித்தியகுமார், கிருஷ்ணன், விக்னேஷ், பிசி. அறிவழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.

Related Stories: