சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரசாரத்தில், அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளையும், அமைச்சராக இருந்து செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, கிழக்கு தாம்பரத்தில் பழமைவாய்ந்த பாத்திமா தேவாலயத்திற்கு டி.கே.எ.ம்.சின்னையா சென்றார். அவரை பாதிரியார் ஜான் கூரியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்றார்.