தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று பொழிச்சலூர் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘பொழிச்சலூர் ஊராட்சி விமான நிலையத்தின் அருகிலேயே உள்ளது. ஆனாலும், இங்கு போதிய வருமானம் இல்லாததால் சாலை, குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. 40 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்தது. நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு நிதியை பெற்று இந்த பகுதிகளில் புதிய தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தேன்.