பெரம்பூர்: பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று கொடுங்கையூர், காமராஜர் நகர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை முழுவதுமாக நாங்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து விட்டோம். ஒரு சிலர் காலையில் மக்களை சந்தித்துவிட்டு அதோடு மாலை தான் சந்திக்கிறார்கள். ஆனால் நாங்கள் வெயில் என்று பாராமல் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம்.