நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த தற்போது சைக்கிளில் கையால் இயக்கப்படும் பம்ப் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொசுக்கள் காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நாகர்கோவில் மாநகராட்சிக்கு பேட்டரியில் இங்கும் நவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மதிப்பிலான இந்த வாகனத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் கைப்பம்பால் அடிப்பதை 10 நிமிடத்தில் அடித்து முடிக்க முடியும்.