சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் நேற்று காலையில் 58வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, மாலையில் அவதான பாப்பையா ரோடு, காளத்தியப்பா ரோடு, வடமலை தெரு, வெங்கடாச்சலம் தெரு, வள்ளுவன் தெரு, முத்து தெரு, காரியப்ப தெரு, முக்தால் தெரு, வைகாரன் தெரு, டவுட்டன் தெரு மற்றும் நாராயண குரு சாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்