ஸ்ரீநகர்: ஜம்மு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால், ‘முன்னாள் முதல்வர் பாஸ்போர்ட் வைத்திருப்பது தேசத்திற்கு அச்சுறுத்தலா?’ என மெகபூபா கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதோடு, இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.